மாவட்டங்களுக்கு இடையேயான போட்டி..வெற்றி பெற்ற அணிக்கு சிறப்பு பரிசு !
Competition between the districts Special prize for the winning team
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 46வது ஆண்டு விழா மற்றும் 2024-2025 ஆம் ஆண்டு நடந்து முடிந்த லீக் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா "ரோட்டரி கிளப் மண்டபம், தருமபுரியில்” நடைபெற்றது. இவ்விழாவிற்கு தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திரு.P.சுரேஷ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய லீக் தகுதிசுற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. லீக் போட்டிகளில் சிறப்பாக திறன்களை வெளிப்படுத்திய இரண்டு டிவிசன்களை சார்ந்த பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள், ஆல்-ரவுண்டர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 2024-2025ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டறிக்கை மற்றும் வரவு-செலவு கணக்குகளுக்கான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு ஒப்பதல் பெறப்பட்டது. தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினை வருகிற ஆண்டில் சிறப்பற விளங்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
English Summary
Competition between the districts Special prize for the winning team