சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் திரு.மு.வரதராசன் அவர்கள் நினைவு தினம்!.
Commemoration day of Tamil writer Mr M Varadarasan recipient of the Sahitya Akademi Award
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் திரு.மு.வரதராசன் அவர்கள் நினைவு தினம்!.
மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார்.
நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார்.
இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது.
மு.வ. தான் எழுதிய நூல்களில் கி.பி. 2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும்,நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்!
குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனை மரண தண்டனையாகும். பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை இல்லை. தற்போது மரண தண்டனையைக் கொண்டுள்ள நாடுகளும் அதை கைவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2002ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி ரோம் நகரில் கூடிய என்.ஜி.ஓ.க்கள் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பின் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி மரண தண்டனை எதிர்ப்பு தினமாக அறிவிக்கப்பட்டது.
English Summary
Commemoration day of Tamil writer Mr M Varadarasan recipient of the Sahitya Akademi Award