பீஹாரில் 121 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு; 16 தொகுதிகளில் பதற்றம்..! - Seithipunal
Seithipunal


பீஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை 121 தொகுதிகளில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதன் காரணமாக பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

அடுத்தகட்டமாக 11 ஆம் கட்ட தேர்தல்  நடைபெறவுள்ளது. பின்னர் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகளும் அதே நாளில் அறிவிக்கப்படவுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 06, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 06 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 09, மார்க்சிஸ்ட் 04 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அத்துடன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

மாநிலம் முழுவதிலும் 7.43 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதில் 3.92 கோடி பேர் ஆண்கள். 3.51 கோடி பேர் பெண்கள் ஆவர். முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைந்துள்ளது. இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் நேற்று பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

இந்த முதல் கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,192 பேர் ஆண்கள், 122 பேர் பெண்கள் அடங்குகின்றனர். ஆர்ஜேடி மூத்த தலைவரும் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், ராகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சதீஷ் குமார் களமிறங்கியுள்ளார். கடந்த 02 தேர்தல்களில் தேஜஸ்வி யாதவ் இந்த தொகுதி யில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பீகாரின் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரி , தாராபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆர்ஜேடி சார்பில் அருண்-ஷா களமிறங்கியுள்ளார். லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ஆர்ஜேடி கட்சியில் இருந்து விலகி ஜன சக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி, மஹூவா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆர்ஜேடி சார்பில் முகேஷ், எல்ஜேபி (ராம் விலாஸ்) சார்பில் சஞ்சய் குமார் சிங், ஜன் சுராஜ் சார்பில் இந்திரஜித் பிரதான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பீஹார் துணை முதல்வராக  சாம்ராட் சவுத்ரி கீழ் உள்ள பாஜக மூத்த தலைவருமான விஜய் குமார் சின்ஹா, லக்கிசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் சுராஜ் குமார் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், முதல்கட்ட தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: பீஹாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் 3.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 45,341 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 06 ஆம் தேதி (நாளை) அதிகாலை 05 மணிக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அதன்பிறகு காலை 07 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 06 மணிக்கு நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பரபரப்பான இந்த சூழலில் பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 16 தொகுதிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் மாலை 05 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஒரு தொகுதியில் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் மட்டும் 05 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து வரும் 11-ஆம் தேதி, 122 தொகுதிகளுக்கு 02-ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Voting for 121 seats in Bihar tomorrow


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->