ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு வாய்ந்த கோவிலின் பண்டிகைகள் மற்றும் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளன்று பொது விடுமுறை, அரசு விடுமுறை இல்லாமல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே மாதம் 21-ம் தேதி மாலை துவங்கி மே மாதம் 22-ம் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.

இந்த விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14 வேலை நாளாகும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

coming may 22 local holiday to ramanathapuram district


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->