கடலூரில் செல்போனுக்காக சண்டையிட்ட 3 உடன்பிறப்புகள்.! நொடியில் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கடலூரில் செல்போனுக்காக சண்டையிட்ட 3 உடன்பிறப்புகள்.! நொடியில் நடந்த கொடூரம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழஞ்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன். இவருக்கு வினிதா, தேவிகா என்ற இரண்டு மகள்களும், விஜயகுமார் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில், வினிதா மயிலாடுதுறையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில், வினிதா, தேவிகா மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட மூன்று பேருக்கும் இடையே வீட்டில் உள்ள ஒரு செல்போனை யார் பயன்படுத்துவது என்பத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த சங்கரன் மூன்று பேரையும் கண்டித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த வினிதா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், வினிதாவை சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்தகாட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு செல்போனுக்காக உடன்பிறப்புகள் போட்ட தகராறில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student sucide in cuddalore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->