கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் உள்ளிட்ட இருவர் கைது..!
College Principle arrested in Karur
மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் , குளித்தலையில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவிக்கு கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
அதற்கு அந்த விடுதி கல்லூரியின் விடுதி காப்பாளர் அமுதவள்ளி மற்றும் சமையலர் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெய்ர்யவந்தது. தனக்கு நடந்த கொடுமை மாணவி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடன்டியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே கல்லூரி முதல்வர் , விடுதி காப்பாளர் ஆகியோர் தலைமறைவாகினர்.
இந்த ஸ்மபவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக தேடி வருகின்றனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர் செந்தில்குமார் மற்றும் விடுதி காப்பாளர் அமுதலவள்ளியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
College Principle arrested in Karur