குழந்தைமனம் கொண்ட யானையை அடித்து துன்புறுத்திய கொடூரர்கள்.. கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


அழகிய குழந்தை மனம்கொண்ட யானை பாகனால் தாக்கப்படும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த முகாமிற்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா வந்தது. இந்த யானையை பாகங்கள் கொடூரமாக தாக்கும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், யானை வலி பொறுக்க இயலாமல் மனிதர்கள் போல அங்கும் இங்கும் ஓடுவதும், கால்களை தூங்குவதும் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது. 

மேலும், யானையை சங்கிலியால் கட்டிப்போட்டு கொடூர பாகன்கள் யானையை தாக்கிய நிலையில், சப்பைக்கட்டுக்கட்டி பதில் கூறி பாகன்கள் சமாளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், இருவரையும் கோவில் நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Elephant Rejuvenation Camp Elephant Tortured Video Released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->