கோவை: செல்போனில் பாட்டு கேட்டதற்கு தகராறு.. முதியவர் அடித்து கொலை.. தந்தை - மகன் கைது.! - Seithipunal
Seithipunal


குப்பையை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவருடன் பிழைப்பு நடத்திய தந்தை - மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் குப்பையை சேகரித்து விற்பனை செய்து வந்த தொழிலாளி யானராஜன் (வயது 50). இவர் ராம்நகர் அன்சாரி வீதியில் படுத்து உறங்குவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவர் சாலையோரத்தில் முகத்தில் காயத்துடன் இருந்துள்ளார். 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டு சிக்சிஹாய்கக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே, அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், யானராஜனின் மீது கல்லைப்போட்டு கொலை செய்தது உறுதியான நிலையில், சம்பவத்தன்று அவருடன் இருந்தவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், யானராஜனின் நண்பர்கள் சுப்பிரமணி (வயது 67), சுப்பிரமணியன் மகன் அருள் குமார் (வயது 47) ஆகியோர் யானராஜனை கொலை செய்தது உறுதியானது. இவர்களும் யானராஜனுடன் சேர்ந்து குப்பையை சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரும் கொலைக்கான காரணம் குறித்து அளித்த வாக்குமூலத்தில், "நான், எனது மகன், ராஜன் ஆகியோர் சாலையோரத்தில் படுத்து உறங்குவோம். சம்பவத்தன்று, ராஜன் எனது மகனின் அலைபேசியை பறித்து பாட்டுக்கேட்டார். நாங்கள் மதுபோதையில் இருந்த நிலையில், வாக்குவாதம் எழுந்தது. 

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, அருகேயிருந்த கல்லை எடுத்து அவரது தலையில் அடித்துவிட்டு நானும், மகனும் அங்கிருந்து சென்றோம். தற்போது அவர் உயிரிழந்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளனர். கைதான தந்தை - மகனான சுப்பிரமணி மற்றும் அருள் குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Aged Man Murder Issue Father Son 2 Arrested by Police 20 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->