தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!
cm stalin compensation announce to thoothukudi bike accident died peoples
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, திருச்செந்தூர் வட்டம், சேர்ந்தமங்கலம் கிறிஸ்துவின் பாசறை சபை அருகில் கடந்த (31.10.2023) அன்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிய விபத்தில் புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்த லசிங்டன் மற்றும் அலெக்ஸ்சாண்டர் உள்ளிட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்கள்.
மேலும் வசந்தன் ப்ரீஸ் என்பவர் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
அதனால், அவரது உறவினர்கள் வசந்தன் ப்ரீஸின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததன் அடிப்படையில் நேற்று உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜன் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
English Summary
cm stalin compensation announce to thoothukudi bike accident died peoples