மாதம் ரூ.1000.. ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஜூலை 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பேசிய அவர், மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் மூலம் மக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு அளிக்கப்படுமென்றார்.

இந்த முகாம்கள் ஜூலை இரண்டாம் வாரம் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறவுள்ளன. மொத்தம் 10,000 முகாம்களில், நகரங்களில் 3,768, கிராமங்களில் 6,232. நகர பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகள், கிராமங்களில் 14 துறைகளின் 46 சேவைகள் மக்களை நேரில் சென்று சந்திக்கும்.

மருத்துவ சேவைகளும் இதில் இடம்பெறும். இதற்கேற்ப, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காமல் தவறிய தகுதியுள்ள பெண்கள், இந்த முகாம்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அவர்கள் தரும் விண்ணப்பங்கள் 45 நாளுக்குள் பரிசீலிக்கப்படும்.

மேலும், இந்த முகாம்களைப் பற்றி விளக்க உள்ளூர் தன்னார்வலர்கள் வீடுதோறும் சென்று வழிகாட்டுவார்கள். எந்த ஆவணங்கள் தேவை, தகுதி என்ன என்பதையும் தெளிவுபடுத்துவார்கள் என முதலமைச்சர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin Announce Makalir urimai thokai 1000 july


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->