தீபாவளி கொண்டாட்டம்! சென்னையில் 151 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்! - Seithipunal
Seithipunal



சென்னையில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்துடன் பெருமளவில் பட்டாசு வெடித்ததால் சென்னை மாநகரத்தின் பல பகுதிகளில் கழிவு தேங்கியிருந்தது. இதனை அகற்றும் பணிகளை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டது. அதில், அக். 19 முதல் அக். 21 வரை மூன்று நாட்களில் மொத்தம் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் நகரத்தின் பல பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 4வது மண்டலமான தண்டையார்பேட்டை பகுதியில் அதிகபட்சமாக 17.33 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து அடையாறு, பெருங்குடி, அண்ணாநகர் மற்றும் வல்லுவர் கோட்டம் மண்டலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

மாநகராட்சி ஊழியர்கள் தீபாவளி நாளும் பண்டிகைக்குப் பிறந்த நாளிலும் சிறப்பு பணியில் ஈடுபட்டு சாலைகள், பூங்காக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய பட்டாசு மீதிகளை அகற்றினர். மக்கள் ஒத்துழைப்புடன் தங்கள் வீட்டு சுற்றுப்புறத்தில் பட்டாசு கழிவுகளை சரியான இடத்தில் கொட்டுமாறு மாநகராட்சி மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.

   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

151 metric ton firecracker waste Chennai


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->