சென்னை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்!...பரனுர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊருக்குச் சென்றனர்.

அவ்வாறு சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 4-ம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ள நிலையில், மொத்தம் 12 ஆயிரத்து 846 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய இன்று ஒரே நாளில் 75 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் சொந்த ஊர் திரும்பிய பொதுமக்கள் தற்போது சென்னை நோக்கி திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Citizens invading towards chennai heavy traffic jam at paranur toll plaza


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->