தமிழகத்தில் நடந்திடாத கொடூர சம்பவம்.! கூட்டு பாலியல் வன்கொடுமை., போக்ஸோ சட்டத்தில் சிக்கிய 7 வயது சிறுவன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இதுவரை நடந்திடாத ஒரு கொடூர சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. 4 வயது சிறுமிக்கு , 7 வயது மற்றும் 9 வயது உடைய மூன்று சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து காயப்படுத்தி உள்ளனர். 

அரியலூர் அருகே 4 வயது பச்சிளம் பெண் குழந்தைக்கு, அதே பகுதியை சேர்ந்த 7 வயது மற்றும் 9 வயது உடைய மூன்று சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, காயம் ஏற்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள பாக்கியநாதபுரம் கிராமத்தில் தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு அதே கிராமத்தை சேர்ந்த 7 வயது மற்றும் 9 வயது உடைய மூன்று சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

தனக்கு என்ன நடந்தது என்று உணராத அந்த பச்சிளம் சிறுமி, அன்று இரவு முழுவதும் வலி தாங்காமல்., தூங்காமல்., அழுதுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியிடம் அவரின் தாய் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்று தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக லால்குடி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மேலும், சிறுமியின் தாய் கொடுத்த புகாரை அடுத்து, 7 வயது மற்றும் 9 வயது உடைய அந்த 3 சிறுவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child harassment near ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->