அம்பத்தூரில் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு.! போலீசார் விசாரணை.!
Child dies after falling into a well in Ambattur
அம்பத்தூரில் கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மூத்த மகனான பிரின்ஸ் (வயது4) நேற்று பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளான்.
பிறகு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த தந்தை புருஷோத்தமன், மகனை தேடி சென்ற போது மண்ணூர்பேட்டை நேரு நகரில் உள்ள கிணற்றில் பிரின்ஸ் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையை யாராவது கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்தார்களா? இல்லை வேறு ஏதும் காரணங்கள் உண்டா? என்று, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Child dies after falling into a well in Ambattur