பத்து வருடமாக தமிழகத்தையே அதிமுக வீணாக்கியுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
chief minister visit in State Emergency Operations Center
தமிழகத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த பருவமழையின் முதல் மழைப்பொழிவு நாளை மறுதினம் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு மழை மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை தொடர்பாக வரும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னை, எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வந்த வீடியோ கால் அழைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அதன் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது, "வட சென்னையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் வந்ததனால், அதனை அப்புறப்படுத்தி வருகிறோம்.
இதையடுத்து, கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் சென்னையை மட்டுமல்லாமல் தமிழகத்தையை அதிமுகவினர் வீணாக்கியுள்ளனர். எல்லாத்தையும் சரி செய்ய வேண்டுமென்றால் பல வருடங்கள் ஆகும். ஆனால் அதனை நாங்கள் ஒன்றரை வருடங்களுக்குள்ளேயே முடித்துவிடுவோம் என்று நம்பிக்கையுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
chief minister visit in State Emergency Operations Center