#சற்றுமுன் : செஸ் ஒலிம்பியா போட்டியின் துவக்க விழா - கலைநிகழ்ச்சி குழுவில் நான்கு பேருக்கு கொரோனா.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மாமல்லபுரத்தில் இன்று 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த போட்டியில் பங்கேற்க சுமார் 188 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர். 

இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியா போட்டியின் துவக்க விழா இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

துவக்க விழாவை முன்னிட்டு அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அரசு சார்பாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக கலை நிகழ்ச்சி கலைஞர்களும் ஒத்திகை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கலைநிகழ்ச்சியில் பங்கு பெற உள்ள குழுவில் நான்கு பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவல் உறுதியாய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chess olympiad Corona performance group


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->