பொத்தேரி ரெய்டு! கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில், பாங், ஸ்மோக்கிங் பாட், ஹூக்கா மெஷின், ஹூக்கா பவுடர்! 500 அடுக்குமாடி வீடுகள், 500 போலீஸ்!  - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் தனியார் மாணவர் விடுதிகளில் இன்று போலீஸார் நடத்திய சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொத்தேரி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியை சுற்றியுள்ள மாணவர் மற்றும் மாணவிகள் தங்கியுள்ள தனியார் விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இன்று காலை பொத்தேரியில் உள்ள அனைத்து தனியார் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளிலும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில், போதை மாத்திரைகள், காஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்து, தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த ரைடு குறித்து போலீசார் தரப்பில் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. 

அதில், சென்னை பொத்தேரியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . 500 அடுக்குமாடி வீடுகளில் சோதனை நடத்தி 19 மாணவர்களை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

கஞ்சா அரை கிலோ, கஞ்சா சாக்லேட் ஆறு , கஞ்சா ஆயில் 20 எம் எல் பறிமுதல் செய்யபட்டுள்ளது. மேலும், பாங் 5, ஸ்மோக்கிங் பாட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டுள்ளது.

இந்த சோதனையை கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தாம்பரம் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி தலைமையில் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai TNPolice College Students Drugs use


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->