அடுத்த அதிர்ச்சி: கீழ்பாக்கம் மருத்துவமனையில் புகுந்து பெண்ணுக்கு நடந்த பாலியல் தாக்குதல்! - Seithipunal
Seithipunal



சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவில், உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 50 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த புகாரில் மதுபோதையில் மருத்துவமனைக்குள் புகுந்த நபர், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.  

சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மேலும், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

சென்னை அண்ணா பல்கலை கழக மாணவி வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனையில் புகுந்து 50 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Kelpakkam hospital harassment


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->