தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! நாளை சம்பவம் லோடிங்!
chennai imd rain alert 12 aug 2025
தமிழகத்தில் பருவமழை தாக்கம் தொடரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று திருவள்ளூர் உட்பட ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக்கடல் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதுடன், ஆகஸ்ட் 13 அன்று மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் அது வலுப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தென்னிந்தியாவின் மேல் இன்னொரு மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
இதன் விளைவாக இன்று வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி மாவட்டங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 13 அன்று திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரியில் மீண்டும் கனமழை ஏற்படும் சாத்தியம் உள்ளது. ஆகஸ்ட் 14 முதல் 18 வரை தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸ், குறைந்தபட்சம் 25-26° செல்சியஸ் இருக்கும்.
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால், இன்று வட தமிழ்நாட்டின் சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
chennai imd rain alert 12 aug 2025