மக்களே உஷார்... சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிமூட்டம்!   - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஜனவரி மாதமும் தொடங்கி பருவமழை தீவிரமாக பெய்தது. 

ஜனவரி மாதம் தொடங்கியும் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வராமல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் மாத தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதி தென்மேற்கு பருவங்களை தொடங்கியது. 

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் வடதமிழகம் முதல் டெல்டா மாவட்டங்கள் வரை பனிமூட்டமாக உள்ளது. 

மேலும் காலை 9 மணிக்கு பிறகு சாலைகள் தெளிவாக இருக்கும். இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். 

சென்னையை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிமூட்டம் நீடிக்கும். 17, 18 ஆம் தேதிகளில் குளிர் சற்று அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Heavy fog next 2 days


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->