ஊரடங்கை மீறி கெத்தாக வீடியோ போட்ட பெண்.. காவல்துறை தேடுவதால் கதறும் பெண்மணி.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்தது. இதனால் தலைநகர் சென்னை, சென்னை மாநகர காவல் எல்லைகளுக்கு உட்பட்ட மாவட்டங்கள், மதுரை, தேனி மாவட்டங்களில் அடுத்தடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இந்த ஊரடங்கில் பல கட்டுப்பாடுகள் அதிரடியாக விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மீண்டும் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வும் இன்றி முழுமையான ஊரடங்கு அமலாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதன்படி, 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்திய சென்னை, சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமையே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இன்று 28 ஜூலை ஞாயிற்றுக்கிழமை சென்னை, சென்னை மாநகர காவல் எல்லைகள், தேனி மற்றும் மதுரையிலும் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. இந்த நாளில் பால் விநியோகம் மற்றும் மருந்துகள் விற்பனையை தவிர்த்து பிற கடைகளுக்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னையை சார்ந்த பெண்மணி தனது இரு சக்கர வாகனத்தில் சென்னையில் உள்ள வடபழனி பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவரே டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்துள்ள நிலையில், இன்றைய தேதியை குறிப்பிட்டு நான் வெளியே சுற்றுகிறேன். 

எத்துணை நாட்கள் தான் வீட்டிற்குள்ளேயே இருப்பது.. அதான் வெளியே சுற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும், இன்று முழு ஊரடங்கு என்று தெரிந்தும், சென்னையின் பிரதான வடபழனி பகுதியில் சுற்றித்திரிந்து, வீடியோ பதிவு செய்தது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த பெண்மணியின் மீது காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai girl roaming outside during Sunday 28 June 2020 amid


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->