சென்னை எண்ணூரில் ரௌடி விக்கி காலில் சுடப்பட்டு கைது! - Seithipunal
Seithipunal


சென்னை, எண்ணூர் பகுதியில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரௌடி விக்கியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் ரௌடி விக்கி பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) நவீன் தலைமையிலான காவலர்கள் குழு அவரைப் பிடிக்கச் சென்றது.

அப்போது, தன்னைச் சுற்றி வளைத்த போலீசாரைக் கண்ட ரௌடி விக்கி, அவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கிவிட்டு, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

இதனையடுத்து, தற்காப்புக்காகவும், ரௌடியைத் தப்ப விடாமலும் இருக்க, போலீசார் ரௌடி விக்கியின் காலில் சுட்டுப் பிடித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரௌடி விக்கி மற்றும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் நவீன் இருவரும் உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரௌடி விக்கியை காலில் சுட்டுப் பிடித்த இச்சம்பவம், சென்னை காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai ennur rowdy Police shoot


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->