சென்னை : கூல் ட்ரிங்ஸ் குடித்துவிட்டு, பானி பூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு.!
Chennai boy drank cool drinks and ate pani puri died
சென்னையை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு யுவராஜ் வசந்தகுமார் ஈஸ்வரன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் வசந்தகுமார் துரைப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அங்கிருந்த கடை ஒன்றில் வசந்தகுமார் கூல் ட்ரிங்ஸ் ஒன்று வாங்கி குடித்துள்ளார். பிறகு உடனே சாலையோரம் இருந்த கடையில் பானி பூரியும் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு வீட்டிற்கு செல்லும் வழியில் வலிப்பு ஏற்பட்டு சிறுவன் கீழே விழுந்துள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு வசந்தகுமாரி பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவன் குளிர்பானம் வாங்கிக் குடித்த கடையிலும், பானிபூரி கடையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Chennai boy drank cool drinks and ate pani puri died