அடையாறு ஆற்றில் மூழ்கிய மாணவன் : 18 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் நேற்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனான். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால், நேற்று மாணவன் கிடைக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மற்றும் ரப்பர் படகு மூலம் இரண்டாவது நாளாக இன்று தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர். சுமார் 18 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 

அதன் பின்னர் மாணவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் கரைக்கு கொண்டுவந்தனர். மகனின் உடலைப் பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேடுதல் பணி அண்ணா பல்கலைக்கழக குழுவினரின் ட்ரோன் கேமராக்கள் மூலம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai adaiyaru river boy dead body rescue


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->