தமிழகத்திற்கு பேரிடி... மேகதாது அணை விவகாரத்தில் வாக்கெடுப்பா? இன்று கூட்டம்.! - Seithipunal
Seithipunal


காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29 ஆவது கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 4 மாநிலங்களுக்கும் ஆணைய தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். 

இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் பெங்களூருவின் நீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாது அணை அவசியம் என்று கர்நாடக அரசு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது நிலவும் தண்ணீர் கட்டுப்பாட்டை சரி செய்ய காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசு உறுதியாக நிற்கும். 

மேலும் இந்த விவாதத்தின் போது மேகதாது அணை கட்டுவது தொடர்பான வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு இணைந்து தமிழக அரசை வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cauvery Management Commission meeting today 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->