நெல்லையப்பர் தேரோட்டத்தில் கண்டிப்பாகக் சாதி அடையாளங்கள் கூடாது..உயர் நீதிமன்ற உத்தரவு! - Seithipunal
Seithipunal


உலகப் புகழ்பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா ஜூலை 8-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சாதிய அடையாளங்களை விழாவில்  பயன்படுத்தக் கூடாது என மதுரை ஐகோர்ட் கண்டித்துள்ளது.

பாளையங்கோட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்ட திருவிழாவில், சாதி அடையாளமுடைய பட்டாசுகள், சாதி ரீதியான கோஷங்கள், டீ-ஷர்ட், ரிப்பன்கள், சமுதாய தலைவர்களை வாழ்த்து கோஷங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இது சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்கும், பக்தர்களின் சுவாமி தரிசன அனுபவத்திற்கும் பாதிப்பாகிறது.

மேலும் சாதி அடையாளங்களை கொண்ட பட்டாசுகள், கொடிகள், வாசகங்கள் மற்றும் வெளிப்படையான பேச்சுகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார் .இந்தநிலையில் இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கண்டித்துள்ளது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்டிஸ் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர்:

அதில் “ஏற்கனவே சாதிய அடையாளங்களை தடை செய்யும் விதிகள் உள்ளன. அதன்படி, தமிழ்நாடு காவல்துறை தலைவர்,இந்து சமய அறநிலைத் துறை ஆணையாளர்இணைந்து,தேர் திருவிழா முழுவதும் சாதி அடையாளங்கள் பயன்படுத்தப்படாதவாறு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.இதையடுத்து விழா அமைதியாகவும், ஒழுங்காகவும் நடைபெறவேண்டும்.”இதன் மூலம் வழக்கு முடிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு, தமிழ்நாட்டில் சமுதாய ஒற்றுமையை உறுதி செய்யும் விதமாகவும், மத நிகழ்வுகளில் அரசியல் மற்றும் சாதி வேறுபாடுகளுக்கு இடமில்லையென உறுதிப்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Caste identifiers should not be present in the Nelaiyappan election Supreme Court order


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->