தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு - காரணம் என்ன?
case file on tvk fans for croud in madurai airport
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கொடைக்கானலில் நடந்த ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த 1-ந்தேதி மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.

அங்கு அவரை த.வெ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.
இதனால் அந்த இடத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்தில் அனுமதியின்றி கூடுதல் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, த.வெ.க. மதுரை மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மற்றும் நிர்வாகிகள் மீது பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
case file on tvk fans for croud in madurai airport