உயிரிழந்த அஜித் குமார் காவலாளி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்...!
case deceased Ajith Kumar guard has been transferred CBI
சிவகங்கை மடப்புரம் காளி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் குமார் என்ற வாலிபரை, நகை திருட்டு புகார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இந்த விசாரணையின் போது திருபுவனம் காவல்துறையினர் கடுமையாக அடித்து கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், லாக்-அப் டெத் காரணமாக 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, திமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில் அஜித் மரணம் வழக்கை சிபிசிஐடி(CBCID ) விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.இது இதுகுறித்த விசாரணை விரைவாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
case deceased Ajith Kumar guard has been transferred CBI