சென்னை: திடீரென தீ பிடித்து எரிந்த கார்கள்.! போலீசார் தீவிர விசாரணை.!
Cars fire at Chennai pazhavantangal
சென்னையில் அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எறிந்த கார்கள் சேதமடைந்தன.
சென்னை பழவந்தாங்கலில் காந்திமணி, ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான 2 கார்கள் அவர்களது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென கார்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து தீயானது நன்கு கொழுந்து விட்டு எரிந்து கார் முழுவதும் பரவியது.
இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் எப்படி தீ பிடித்தது? மர்ம நபர்கள் யாராவது காருக்கு தீ வைத்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் பழவந்தாங்கல் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Cars fire at Chennai pazhavantangal