திருவள்ளூர்! தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடிப்பு.!
Car fire in tiruvallur
திருவள்ளூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
திருத்தணியை சேர்ந்த ராஜேஷ் குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று இண்டிகோ காரில் திருவள்ளூர் சென்றுள்ளனர். அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு வரும்போது புதூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று காரின் முன்பக்கத்தில் புகை வந்துள்ளது.
இதைப்பார்த்த இருவரும் காரை உடனடியாக ஓரமாக நிறுத்தி இறங்கிய நிலையில், சிறிது நேரத்தில் காரின் முன்பகுதி தீப்பிடித்து மளமளவென எரிந்து உள்ளது.
இந்த சம்பவம் குறித்த விரைந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார் தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.