காரைக்குடி! திடீரென்று கார் தீப்பிடித்து விபத்து.! - Seithipunal
Seithipunal


காரைக்குடியில் திடீரென்று கார் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

காரைக்குடியை சேர்ந்த குப்புசாமி என்பவர் அவரது இரு உறவினர்களுடன் காரில், வெளியூர் சென்றுவிட்டு காரைக்குடி திரும்பியுள்ளார். அப்போது காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே வரும்போது காரின் முன்பகுதியில் புகை வந்ததைப் பார்த்த குப்புசாமி மற்றும் இரு உறவினர்களும் காரிலிருந்து இறங்கிய நிலையில் திடீரென்று கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. 

இந்த விபத்து குறித்து, தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் காரில் வந்தவர்கள் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

car fire accident in karaikudi


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->