#தேனி || கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு.!
Car accident in theni
தேனி மாவட்டத்தில் கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்து உள்ளார்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் திருக்களத்தூறை சேர்ந்த அனுப்(32) என்பவர் தேனி மாவட்டம் சின்னமனூரில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அனுப் மற்றும் அவருடன் வேலை பார்த்த நான்கு பேருடன் கேரள மாநிலத்தில் உள்ள தூக்குபாலத்திற்கு சென்று விட்டு, சின்னமனூருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது கோகிலாபுரம் விளக்கு பகுதியில் காரை நிறுத்திவிட்டு அனுப் சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அனுப்பு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அனுப்பை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அனுப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.