தூத்துக்குடி.! கஞ்சா கடத்திய 2 இளைஞர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்திய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு, முறப்பாநாடு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளன.

இதையடுத்து காவல்துறையினர் முறப்பநாடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த இரண்டு இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கஞ்சா கடத்தி செல்வது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து இரண்டு இளைஞர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cannabis smugglers arrested in Thoothukudi


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->