அப்படியா! மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்களிடம் சிக்கிய கஞ்சா வியாபாரி...! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி கோவில்பட்டி 'மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு' காவல் நிலைய காவலர்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, ரோந்து பணிக்காக மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குருவெங்கட்ராஜ் மேற்பார்வையில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீகா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் சில காவலர்கள் சேர்ந்து  இன்று (3.6.2025) கோவில்பட்டி, தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடி அருகே மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து காவலர்கள் விசாரணை செய்தனர். அதில் அவர் கோயம்புத்தூர், உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஏசுவடியான் மகன் 42 வயதான சாமுவேல்ராஜ் என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக சாமுவேல்ராஜை மேற்கட்ட விசாரணைக்காக கைது செய்து அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cannabis dealer was caught by Prohibition Enforcement Division What happened


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->