முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு!
Call for former athletes to apply for pension
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பதாரர்நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
விளையாட்டுத் துறையில் சர்வதேச/ தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு/தனியார் நிறுவனங்கள் அல்லது மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
சர்வதேச/ தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல், சர்வதேச/ தேசிய போட்டிகளில் முதலிடம்/ இரண்டாமிடம் /மூன்றாமிடம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும்.
பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம்/ இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.
2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரரின் மாதவருமானம் ரூ.6,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை இணைத்து, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் அலுவலக வேலை நேரத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும்.
விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள், வயது மற்றும் அடையாளச் சான்றிதழ் , பிறப்பிடச் சான்று (2025-ம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), வருமானச்சான்று (2025-ம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), ஓய்வு பெற்றதற்கான விவரங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் இணைத்து 31.7.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Call for former athletes to apply for pension