5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - அண்ணன் கைது - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அண்ணனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு 21 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கூலிதொழிலாளியின் மனைவி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இதில் இரண்டாவது மனைவிக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு, முதல் மனைவியின் மகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அண்ணனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brother arrested for sexually harassing 5 year old girl in kirishnagiri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->