காதலி இறந்த சோகத்தில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்.? - Seithipunal
Seithipunal


சென்னையில் காதலி இறந்த சோகத்தில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த 21 வயதான பிரபு கார்த்திக் என்ற இளைஞர் சென்னையில் வங்கி தொடர்பான வாடிக்கையாளர் சேவை மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு பிறகு சென்னை பெரியமேடு  பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முன்னதாக தற்கொலை செய்துகொள்ளும் முன் போட்டோ எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் அவருக்கு கால் செய்து பார்த்துள்ளனர். ஆனால் இவர் யாருடைய அழைப்பையும் எடுக்கவில்லை.

அதன்பிறகு இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த விடுதி ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பிரபு கார்த்திக் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், விசாரணையில் மதுரையில் பிரபு கார்த்திக் தனது மாமன் மகளை காதலித்து வந்ததாகவும், அவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த மன விரக்தியில் தான் பிரபு கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boyfriend commited suicide on tragedy on girlfriend death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->