சாலையில் சென்று கொண்டிருந்த சிறுவன் மீது மோதிய கார்.. சிறுவன் பரிதாப பலி..!
Boy Death in Accident
சிறுவன் கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவர் கேரளாவில் சி.ஐ.எஸ்.எப். கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். உறவினர் வீட்டு விசேஷத்துக்கு தனது மகன் ஜோன்ஸ்லி உடன் வந்துள்ளார். விசேஷத்துக்கு வந்த இடத்தில் மெயின் ரோடு செபஸ்தியார் கோவில் அருகே நின்றிருந்த போது அங்கிருந்த கார் சிறுவன் மீது மோதியது.
இதில், தூக்கிவீசப்பட்ட சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குடித்து வழக்குபதிவு செய்ய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.