செல்போன் வாங்கி தராததால் சிறுவன் செய்த விபரீத செயல்..! - Seithipunal
Seithipunal


செல்போன் வாங்கி தரத்தால் சிறுவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் இருக்கின்றனர். இவரது மகன் அங்குள்ள பள்ளியில் படித்துவந்தார். கடந்த சில மாதங்களாக தனது பெற்றோரிடம் இருந்து செல்போன் வாங்கிதர கூறியுள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து அவரது பெற்றோர்ர் செல்போன் வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன் வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியைடைந்த அவரது பெற்றோர்  சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boy attempt Suicide Near Salem


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->