சென்னை புத்தகக் காட்சியில் சுமார் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை..!
Books worth about Rs 20 crore sold at the Chennai book fair
பபாசி நடத்திய 48-வது புத்தகக் காட்சியில் சுமார் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த டிசம்பர் 27-ந் இந்த புத்தக திருவிழா தொடங்கியது. சுமார் 900 அரங்குகள் 10 அமைக்கப்பட்டு 10 சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, ஆன்மிகம், மொழிபெயர்ப்பு என பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்தனர்.
இந்த நிலையில், 17 நாட்களக நடைபெற்று வந்த புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தபுத்தகக் காட்சி தொடங்கியதில் இருந்து, நிறைவு பெற்றது வரை மொத்தம் 20 லட்சம் பேர் புத்தகக் காட்சிக்கு வருகை தந்ததாக பபாசி அறிவித்துள்ளது.
English Summary
Books worth about Rs 20 crore sold at the Chennai book fair