நாளை குமரி திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலம் மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவைகள் ரத்து; குற்றாலம் அருவி மூடல்..!
Boat services to the Kanyakumari Thiruvalluvar Statue the Glass Bridge and the Vivekananda Memorial Hall have been cancelled for tomorrow
நாளை தமிழக சட்டமன்ற தேர்தலக்கண வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி குமரி திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலம் மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 04 முனை போட்டி நிலவுகிறது.
திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கியுள்ளது. அதிமுக எப்படியும் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டுமென களத்தில் இறங்கியுள்ளது. அதேபோன்று தவெக விஜய் முதல் முரணியாக களத்தில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;
''சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் வகையில் நாளை ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலம் அருவி மூடப்படுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெள்ளியங்கிரி மலைக்கு புதன்கிழமை மாலை 6 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கம் போல் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாம், இந்த உத்தரவை மக்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நேரத்தில் கோவை குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு மக்கள் யாரும் செல்ல முயற்சி செய்ய வேண்டாம்.
இந்த தடை மீறி குற்றாலம் அருவி, வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதை தடுக்க வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள், தேர்தலில் வாக்களிக்க வசதியாக விடுமுறை விடப்பட்டுள்ளது.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Boat services to the Kanyakumari Thiruvalluvar Statue the Glass Bridge and the Vivekananda Memorial Hall have been cancelled for tomorrow