வரும் மார்ச் 10ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தமிழகம் வருகை.! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வரும் மார்ச் 10 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பாஜகவில் இருந்து விலக அண்ணாமலை தான் காரணம் என்றும் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டியிருந்தார். 

இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அன்பு சகோதரர் நிர்மல் குமாருக்கு வாழ்த்துக்கள் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும் என பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அடுத்த 24 மணி நேரத்திற்குள் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் கட்சியிலிருந்து விலகினார்.

இவ்வாறு பாஜகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் நிலவி வரும் சூழலில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வரும் மார்ச் 10ம் தேதி தமிழகம் வர உள்ளார். தமிழகத்திற்கு வரும் அவர் கிருஷ்ணகிரியில் உள்ள புதிய மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும், தமிழகத்திற்கு வரும் அவர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP JP Natta comes to tamilnadu on March 10


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->