தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசம்: வாலிபரை சுற்றி வளைத்த போலீசார்! - Seithipunal
Seithipunal


திருப்பூர், ஊத்துக்குளி அருகே உள்ள கோவை-சேலம் பைபாஸ் சாலையில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்வதாகவும் சாகசம் செய்வதாகவும் இதனால் போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து அபாயம் ஏற்பாடும் என அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் போலீசார் கோயம்புத்தூர் பைபாஸ் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து கொண்டிருந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

பின்னர் கைது செய்யப்பட்ட வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது அவர் அவிநாசி பகுதியை சேர்ந்த துரைராஜ் (வயது 23) என்பது பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் இவர் தனது இரு சக்கர வாகனத்தில் அபாயகரமான சாலைகளில் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததும் தெரிய வந்தது. 

இதனை அடுத்து போலீசார் வாலிபரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bike adventure on national highway Police arrested teenager


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->