சிறுமியை கடத்திச்சென்று கட்டாய திருமணம் - நாடக காதலன் போக்ஸோவில் கைது! - Seithipunal
Seithipunal


பவானி அருகே சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, கட்டாயத் திருமணம் செய்த நாடகக் காதலனை, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் அக்கம் பக்கம் வீடுகளிலும், தங்களது உறவினர்கள் வீடுகளிலும் தேடிப் பார்த்துள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், பவானி காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது குறித்து பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பவானி தனியார் உணவகத்தில் தங்கி வேலை பார்த்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர், சிறுமியை ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்தது தெரிய வந்தது.

மேலும், சிறுமியை பாலியல் துன்பத்தில் ஈடுபடும் தெரிய வந்தது. இதனை அடுத்து அருண்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bhavani school girl kidnap case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->