மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களே... திருச்சி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! - Seithipunal
Seithipunal


இன்று காலை திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதையே, இன்று தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க காரணம்.

இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்கள்தான் முதலிடத்தில் இருக்கும்" என்றார்.

பட்டமளிப்பு விழா முடிந்து, மதியம் மூன்று மணி அளவில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 1200 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள பன்னாட்டு புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சியின் போது 19850 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bharathidasan University Trichy MKStalin Speech PMModi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->