குழந்தையின் உயிரை பறித்த தண்ணீர் தொட்டி., புதுகோட்டையில் நடந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளத்தை  பகுதியில் வசித்து வருபவர் குமாரசாமி. இவருக்கு திருமணமாகி சுசீலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு குணவதி என்ற  வயது மகள் இருக்கிறாள்.

சம்பவதன்று, குழந்தை வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.

இதனை கண்டு பதறி போன பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைய பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Baby killed after falling into water tank


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->