பாத்திரத்தில் சிக்கிய குழந்தையின் தலை - போரூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள போரூரில் வசித்து வருபவர்கள் கார்த்திக்-ஆனந்தி தம்பதியினர். இவர்களுடைய ஒன்றரை வயது குழந்தை கிருத்திக். இந்த நிலையில், குழந்தை வழக்கம் போல் வீட்டில் உள்ள பாத்திரத்தை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது, குழந்தை எதிர்பாராதவிதமாக ஒரு பாத்திரத்தில் தன் தலையை விட்டுள்ளது.

எவ்வளவு முயற்சி செய்தும் குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரைத்தை பெற்றோரால் அகற்ற முடியவில்லை. உடனே இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை ராட்சத கத்திரி கொண்டு வெட்டியெடுத்து குழந்தையை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டனர்.

சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னே குழந்தையின் தலையில் இருந்த பாத்திரம் அகற்றப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby head stuck in vessel


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->