திண்டுக்கல் : மருத்துவமனை கழிவரையில் இறந்து கிடந்த ஆண் குழந்தை.! தீவிர விசாரணையில் போலீசார்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் : மருத்துவமனை கழிவரையில் இறந்து கிடந்த ஆண் குழந்தை.! தீவிர விசாரணையில் போலீசார்.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு வசதியும் உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மருத்துவமனையின் கழிவறையில் ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனை கன்காணிப்பாளருக்கு தகவல் அளித்தனர். உடனே அவர்கள், சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிசுவின் உடலைக் கைப்பற்றினர். மேலும், மருத்துவர்கள் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் படி போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த இரு நாள்களில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் எத்தனைப் பிரசவம் நடந்தது?. அதில் எத்தனை பேர் வீட்டுக்குச் சென்றனர்? அவர்களின் குழந்தை வீட்டில் உள்ளதா? என்று தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby body found in dindukal medical college toilet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->