கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - ஆட்டோ ஓட்டுநர் கைது - Seithipunal
Seithipunal


சென்னையில் கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் நீலாங்கரை பகுதியில் தனியாக நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர், சிறுமியை போகும் வழியில் இறக்கி விடுவதாக கூறி சிறுமியை ஏற்றிச் சென்றுள்ளார். ஆனால், ஓட்டுநர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். பின்பு ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்டோவை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமி ஓட்டுநரின், பிடியில் இருந்து தப்பி வந்து இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Auto driver arrested for sexually harassing 12 year old girl by threatening her with a knife in chennai


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->