நடந்துச் சென்ற சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் தொல்லை - போக்ஸோவில் ஆட்டோ டிரைவர் கைது.!!  - Seithipunal
Seithipunal


நடந்துச் சென்ற சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் தொல்லை - போக்ஸோவில் ஆட்டோ டிரைவர் கைது.!! 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாலன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ரசல். இவரது வீட்டின் முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். 

இதைப் பார்த்த ரசல் அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக பிடித்து ஆட்டோவில் ஏற்றி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

இருப்பினும் சிறுமி சம்பவம் குறித்து தன் உறவினர் ஒருவரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் விரைந்து சென்று ரசல்ராஜிடம்  சம்பவம் குறித்துக் கேட்டுள்ளார். அப்போது, ரசல்ராஜ் சிறுமிக்காக நியாயம் கேட்டு வந்தவரை தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளார்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ரசல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

auto driver arrested for sexuall harassment in kanniyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->